×

அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவிக்க ‘ஊராட்சி மணி திட்டம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் ஊராட்சி மணி அழைப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் ஊராட்சி மணி அழைப்பு மையம் புதிதாக அமைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக 155340 என்ற மைய அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி மணி மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவிக்கும் வகையில் கூடுதல் இயக்குனரால் சமீபத்தில் காணொலி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சி மணி அழைப்பு மைய நிகழ்ச்சியை தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவிக்க ‘ஊராட்சி மணி திட்டம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,panchayat ,Panchayats ,CM ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...